📌 சந்த அமைப்பின்படி வரிகள் பிரிக்கப்பட்டுள்ளன — மெட்டுக்கேற்ப சீர் பிரிவு / Lines follow traditional chandam (rhythmic) word-breaks of the original composition.
அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதி
வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா
விடதர திகுணர் சசிதரர் நிமலர்
வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.
கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை மற்றும் முருகன் பூஜை நேரங்களில் பாடலாம். Recite on Krittika, Shashti, Tuesdays and during Murugan puja.